தமிழக அரசியல் களம் மீண்டும் பழைய ரூட்டில் பயணிக்க தொடங்கிவிட்டதோ என்று கேள்வி எழுப்பும் வகையில் தவெகவின் நடவடிக்கைகள் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில் ஊழல் வழக்குகள் உடன் கட்சியில் விஜயபாஸ்கர்கள் இணைந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அடிபடும் தவெகவின் தூய சக்தி பிம்பம்
75 years old பிடித்து திமுக எதிர்ப்பு மனநிலையில் தீவிரமாக இருக்கும் தவெகவிற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது எனச் சுட்டிக் காட்டுகின்றனர். மாற்று சக்தி என்று தங்களை முன்மொழிந்து Where is it? என்ற கேள்வியை சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வாடிக்கையான விஷயம் தான். ஆனால் தவெகவில் இருப்பவர்களும், பொதுமக்களும் எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியமானது.
தவெகவிற்கு காத்திருக்கும் நெருக்கடிகள்
| அனுசரித்து செல்லுதல் | ஏனெனில் புதிதாக கட்சிக்குள் வருபவர்களை அனுசரித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தவெகவினர் இருக்கின்றனர். |
| சீனியர்கள் vs ஜூனியர்கள் | ஊழல் கறை, வழக்குகள் போன்ற விஷயங்களை தாண்டி புதிதாக உள்ளே வரும் சீனியர்களுக்கு கீழ் ஜூனியர்கள் செயல்படுவதா, விஜய் உடன் நீண்ட காலம் பயணித்த நிர்வாகிகளுக்கு கீழ் புதிதாக வந்துள்ள சீனியர்கள் செயல்படுவதா என்பதில் பல்வேறு சங்கடங்கள் நிலவி வருகின்றன. |
| மக்களை அவமதிக்கும் செயல் | மாற்று சக்தி என்றும், இருபெரும் திராவிட கட்சிகள் இதுவரை சுரண்டியது போதும் என்ற கணக்குடன் விஜய்யின் வசீகர அரசியலுக்கு வாக்களித்த மக்களை அோல் ஆகாதா? என்ற கேள்வி எழுகிறது. |
நாளுக்கு நாள் கூடும் TVK செல்வாக்கு…குவியும் மாற்று கட்சியினர்!
அறப்போர் இயக்கம் முன்வைக்கும் குட்கா விமர்சனம்
- அறப்போர் இயக்கம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குட்கா வெற்றிக் கழகம் என்ற விமர்சனம் பேசுபொருளாக மாறியுள்ளது.
- ஒருபுறம் ஊழல் மற்றும் போதை கலாச்சார் பெரிய சக்தியாக இருப்பவர் சி. விஜயபாஸ்கர். இவரை கட்சியில் சேர்த்து கொண்டு அவர் மீது விசாரணையும் தொடரும் என்று சொல்வது முட்டாள் ஆக்கும் செயல்.
- விஜயபாஸ்கர் வைத்திருக்கும் வாக்கு வங்கிக்காக முதல்வர் விஜய் கொடுக்கும் லஞ்சம் இது. இப்படி வருபவர்களை ஏற்றுக் கொண்டு தமிழக Where is it? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
திமுகவிடம் இருந்து வந்த மதச்சார்பற்ற சக்திகள்
இதில் தவெகவினர் முன்வைக்கும் வாதத்தைும் கவனிக்க வேண்டியிருக்கிறது. விஜயபாஸ்கர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லையே என்கின்றனர். இருப்பினும் இதுபோன்ற நபர்களை கட்சியில் சேர்க்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு தவெக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும். மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் இணைத்துள்ளனர். இதுதான் ஆக்கப்பூர்வமான அரசியல். ஆட்சியை கவிழ்க்கும் அளவிற்கு இவர்கள் நெருக்கடி கொடுக்க போவதில்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டனர்.
விக்கிரவாண்டி மாநாட்டில் சொன்னது போல் ஆட்சியில் பங்கு என்ற விஷயத்தை செயல்படுத்தி தமிழக அரசியலில் புதிய டிரெண்டை செட் செய்திருக்கின்றனர். இது சமூக நீதி பேசும் தமிழக மண்ணில் சமத்துவ மனப்பான்மையை இன்னும் ஆழமாக விதைக்கும் முயற்சி. இப்படியான சூழலில் அதிமுகவில் இருந்து தொடர்ச்சியாக ஆட்களை இழுப்பது தவெக மீதான களங்கத்தை மேலும் அதிகப்படுத்தி வருகிறது.
திமுக, அதிமுகவிற்கு தைரியம் இல்லை
இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் மணி கூறும் போது, இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை விஜய் நிகழ்த்தி இருக்கிறார். தனித்து நின்று 35 சதவீத வாக்குகளை வாங்கியுள்ளார். இதை பலமுறை நாம் பேசியிருக்கிறோம். மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டே தங்களின் செயல் திட்டங்கள் மூலம் ஆட்சி செய்ய முடியும்.
இந்த செயல் திட்டங்கள் ஏற்பவர்கள் உடன் நிற்கலாம். விரும்பாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று நிலைப்பாட்டை விஜய் முன்வைக்கலாம். ஒருவேளை எதிர்க்கட்சியாக அமரும் நிலை வந்தால் கூட, அதையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு செயல்படுவோம். ஆனால் ஒருபோதும் ஆள்பிடிக்கும் வேலையை செய்ய மாட்டோம் என்று தெளிவாக நிற்கலாம். அப்படி செய்தால் இந்த ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக என யாருக்கும் தைரியம் வராது என்று தெரிவித்தார்.

