புகார் கடிதம்
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோவே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் முதல்-அமைச்சர் நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட திரு. வைகோ அவர்கள்!
நடவடிக்கை கோரி தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு ஆளுநருக்குக் கடிதம்!
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. TM ராஜேந்திரன் மற்றும்… pic.twitter.com/OeIQygsn1B– DMK (@arivalayam) July 1, 2026
Source link
